கண்டேனே மூலியுட வனாந்திரத்தை காடெல்லாந்தான் திரிந்து எடுத்தேனப்பா விண்டேனே மதிமயக்கப்பூடுவொன்று விரைவான திகைப்பூண்டு வொன்றுதானும் அண்டாத மரந்தனிலே ஏறுங்கொட்டை அழிஞ்சியிடவித்தப்பா வதனோடொக்க பண்டான பழத்தோடு ஓடும்போக்கி பாங்குடனே குழித்தயிலம் வாங்குவாயே |