| கூறுவார் குருபரத்தின் தத்துவத்தைத் தாண்டி குறிப்பாக சிவனுட தெரிசனையைக்கேளு தேறுவார் சீவகளை கோடிரவிபோலச் சிறப்பாக நின்றுதடா திடமாடீநுப்பாரு ஆறுவார் சிவனென்ன சிவமேயாச்சு அறையிறேன் அதில்நின்றான் உறையொட்டாது ஊறுவார் உன்னியதில் நின்றாயானால் உயரவல்லோ தூக்கியே விழுங்குந்தானே |