உரைத்தோமே சீனபதிமாந்தருக்கு வுத்தமனே கண்காணா வுணவையெல்லாம் நிரைத்துவிட்டேன் வெள்ளையென்ற மாந்தருக்கு நிறையான கைமுறையும் முழுதும் சொன்னேன் கரைத்துவிட்டேன் காயாதி கற்பந்தன்னை கருவாக வுளவுதனை யறிந்துகொண்டார் மரைத்துமே கற்பமது வுண்டபோது பறக்குமடா நோயேது பிணிதானேதே |