பாரேதான் சிலும்புதனில் புகையெழும்பி பண்பான லாகிரியை மீட்டும்போது நேரேதான் காயாதிகற்ப செந்தூரந்தான் நீடாழிக்காலம்வரை பழுதுறாது கூரேதான் நவகோடி ரிஷிகள்தாமும் குறிப்பான சித்தர்முனி யனேகம்பேர் சீரேதான் இப்படியே சொல்லாமற்றான் சீரான செந்தூரங் கொடுத்தார்காணே |