தொழுதுமே முக்காலும் பணிந்துமேதான் தொல்லுலகையான் மறந்துதுதித்தேனப்பா பழுதுபடாத திருமேனி க்காவலாரே பாருலகில் பள்ளிகொண்ட நாயனாரை முழுதுமே யாழியது கோட்டைசுத்தி மோனமுடன் குளிகைகொண்டு நிற்கும்போது வழுவாக யாசீர்மம் அங்கேகண்டேன் வண்மையுள்ள கிருஷ்ணராசீர்மந்தானே |