காவலாங் கானாறுபதியிலப்பா கார்த்திருப்பார் வெகுகோடி சித்தரங்கே ஆவலுடன் கெம்பெடுக்கப் போகும்போது வப்பனே யவர்கருணை மிகவேவேண்டும் யேவலுடன் அவர்பணிக்கு முன்னேநின்று எழிலான கெம்பதனை எடுக்கலாகும் கோபமது வாராமல் குருவின்முன்னே கொப்பெனவே யாசீர்மம் கொள்வீர்தாமே |