தங்கமாஞ் சித்தர்களில் இவர்கீடுண்டோ தாரிணியில் காயாதிகொண்டசித்து புங்கமாஞ் சித்துயெட்டு கொண்டசித்து புகழான மூலிவகையறிந்தசித்து தங்கமாம் மாண்டவரை எழுப்புஞ்சித்து துரைகோடி வரைகோடி யறிந்தசித்து சிங்கமாம் பதினெண்பேர் சித்துதன்னில் சீர்மிகு வகஸ்தியர்க்கு உகந்தசித்தே |