பாரேதா னின்னமொரு மார்க்கங்கேளு பாங்கான புலிப்பாணி மைந்தாபாரு நேரேதான் எனதையர் காலாங்கி நாதர் நேர்மையுடன் எந்தனுக்கு வுரைத்தநீதி சீரேதான் குளிகைகொண்டு யடியேன்தானும் சிறப்புடனே அஷ்டதிசை சுத்தியல்லோ வீரேதான் வடக்குமுகம் போகும்போது வீரான கடுவெளியைக் கண்டேன்தானே |