பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பட்சமுடன் எந்தனுக்கு ரிஷியார்தாமும் நேரேதா னிடைபாதி யெனக்குத்தந்தார் நேர்மையுடன் திரவியங்கள் அனைத்துமல்லோ தேரேதான் செம்பொன்னின் வராகந்தன்னை தேற்றமுடன் எந்தனுக்குத் தகமைகூர்ந்து ஊரேதான் கொண்டுபோக எனக்குச்சித்து வுத்தமனார் வுத்தாரந்தந்திட்டாரே |