அனுப்பினார் தேவேந்திர பகவான்தானும் வன்புடனே போகரிஷி விடையும்பெற்று மனுநீதி வழுவாமல் இந்திரன்பக்கல் மாட்சியுடன் போகரிஷிமுனிவர்தானும் தனுசுடைய இந்திரனார் வில்லுங்கண்டு தாடிநமையுடன் போகரிஷிவிடையும்பெற்று பனுவலுடன் வையகத்தில் வந்துமல்லோ பட்சமுடன் ரிஷிதனையே கண்டிட்டாரே |