கொண்டேனே காயாதி கற்பங்கொண்டு குவலயத்தில் சித்துமகா புருஷர்தம்மை கண்டல்லோ வலைக்கழித்த மாயாசித்து கனமான ரேணுகையாள் மாதுதானும் கொண்டல்வண்ணன் மாயாதி கிருஷ்ணாகாரன் குவலயத்தில் என்வலையில் சிக்கினாரே தண்டவள ரிஷிகளெல்லாம் மயக்கிவிட்டேன் தாரணியில் பூபாலா யென்றிட்டாலே |