தானான சீனபதிப் பெண்கள்மாரே தன்மையுடன் வதிசயங்கள் இன்னஞ்சொல்வேன் கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருபாதக் கடாட்சத்தாலும் தேனான மனோன்மணியாள் அருளினாலும் தேசமெலாம் சுத்திவந்தேன் இதுபோலில்லை பானான ரேணுகையின் தெரிசனத்தை பாருலகில் அடியேனுங் கண்டிட்டேனே |