வேதையாமின்னமொரு மார்க்கங்கேளு விருப்பமுடன் சொல்லுகிறேன் வுகந்துபாரு பாதையாம் மூப்பென்ற செந்தூரத்தை பலபலவாஞ் சாத்திரத்தில் மிகவுஞ்சொன்னார் நீதையுடன் உப்பென்ற செந்தூரத்தை நீட்சியுடன் உங்களுக்கு முகஞ்சொன்னதில்லை சோதையாம் பலபலவாஞ் சாத்திரத்தை தோறாமல் கண்டல்லோ துணிவுற்றேனே |