தாக்கிடவே லிங்கமது யிறுகிமைந்தா தண்மையுடன் வெட்டருக்கு போலேகாணும் நோக்கிடவே மேற்போக்கு புகலக்கேளும் நுட்பமுடன் தேனதனை சுருக்குதாக்கு வாக்குடனே காலாங்கி நாதர்பாதம் வண்மையுடன் அவர்பாதம் வணங்கியல்லோ தீக்குழியில் அயமதனால் கட்டிதன்னை தீர்க்கமுடன் தானெடுத்து செப்பக்கேளே |