|
செவ்வாய் தோசமுள்ளவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள்,ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் உடையவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் குறைபாடுகள் நீங்கும். காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம் வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று வழிபட வேண்டும்.
வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும் குசன்
நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி
என்று தோத்திரம் சொல்லி வணங்கினால் மேற்கூறியபடி தோஷ நிவாரணம் ஏற்படுவதோடு அம்மனின் அருள் கிடைக்கும். ரத்த சம்பந்தமான நோய்களும் நீங்கும். வெற்றி கிட்டும்.
குறிப்பாக இந்த விரதத்தை அனுசரிக்கும் கன்னிப் பெண்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.
|